கன்ம முளை காரணமாய்,
ஆணவ உமியகற்றும்
மாயைத்
தவிடுடைத்து
ஆருயிர்
நெல்.
ஆக்கி, அளித்து,
அழிப்பவன்
அவனன்றோ!
ஆணவம்,
கன்மம், மாயை என்னும் மூன்று
தடைகளையும் உவமைப்படுத்தி உரைக்க விழைகின்றேன்.
ஓர் நெல் உயிராகக் கருதப்படின்,
அந்நெல்லைச் சுற்றி முழுவதும் மூடி
இருக்கும் உமி ஆணவம். நெல்
தோன்றக் காரணமான முளை தான்
கன்மம். அதாவது வினைப்பயன்.
மாயை என்னும் தவிடுடைத்து என்பதில்,
உமியை அகற்றி நெல்லைப் பிரித்தெடுக்கும்
தவிடு போன்று உயிருக்கு பிறப்பென்னும்
மாயை தோன்றுகிறது. ஏனெனில் உடலுடன் கூடி
உயிர் பிறப்பெடுத்தால் தான், மெல்ல மெல்ல
தன் வினைப் பயன் உணர்ந்து,
ஆணவம் அழித்து ஆருயிரானது தனியாக
வெளிப்பட்டு ஆண்டவனை அடைய இயலும்.
ஓர் உயிரை ஆக்கி, அதாவது
படைத்து, வினை முதலான பயன்களை
அடையச் செய்து, ஆணவம் அழித்து
உயிரை நல்வழிப் படுத்தும் தொழிலான் இறைவனே.