Wednesday 10 September 2014

ஐந்தொழில்கள்


                   


இது சித்தாந்த சாத்திரமாகிய 'உண்மை விளக்கம்' என்ற நூலில் உள்ள செய்யுள். இது கி.பி. 1232 (கி.பி 13ம் நூற்றாண்டு ) ஆண்டில் திருவதிகைமனவாசகங்கடந்தார் என்ற சித்தாந்தியால் எழுதப்பட்ட நூல்.

தொன்மைமிக்க சைவத்துக்கு காலம் கி.பி. 12 ஆம் நூற்றாண்டுக்கும் முந்தையது என்கின்றன ஆய்வு நூல்கள்.

மனிதர்களுக்கு இருக்கும் தொழில்கள் போல, பரம்பொருளுக்கும் பல தொழில்கள் உண்டு. அவை:

  1. படைத்தல் 
  2. காத்தல் 
  3. அழித்தல் 
  4. மறைத்தல் 
  5. அருளல் 


படைத்தல் 
உலகைப் படைத்தல். சில சித்தாந்த சொல்லாடல்களை பயன்படுத்தினால் தான் சிறப்பை உணரமுடியும்.


  • தனு  - உடல் 
  • கரணம் - மனம், புத்தி, சித்தம்.. பற்பல 
  • புவனம் - உலகம் 
  • போகம் - இன்பம் 

இவைகளையெல்லாம் இறைவன் படைக்கின்றான். யாருக்காக என்றால் உயிர்களுக்காக.

காத்தல் 

தான் படைத்தவைகளை ஒரு கால எல்லை வரை நிறுத்தி வைத்து, உயிர்களுக்குப் பயன்படச் செய்தல். அதாவது உயிர் உடலை விடுத்து பிரியும் வரை அவ்வுயிருக்கான காத்தலைச் செய்கின்றான்.

அழித்தல் 
தான் தோற்றுவித்தவைகளை மாயையில் ஒடுக்குதல். மாயை என்றால் நிலையில்லா சடபொருள்களில்லாம் ஒடுங்கி மறுபடியும் உண்டாதல். ஆக மாயை என்பது தான் பிறப்புக்கே மூல வித்தாகின்றது.

மறைத்தல் 
உயிர்கள் உலக வாழ்வியல் இன்பங்களில் மூழ்கி நிற்கும் போது, தன்னை மறைத்து நிற்கின்றான்

அருளல்
உயிர்கள் ஒருவாறு, உலக மாயையை (ஆசை) வெறுக்கும் போதும், தன்னை நினைத்து உருகி நிற்கும் போதும், அருளாளனாய் நின்று தன்னை உயிர்களுக்குக் காட்டுகின்றான்.

'பஞ்சகிருத்தியம்' எனப்படும் இத்தொழில்களை இறைவன் புரிவதற்கும் ஓர் காரணம் உண்டு. அது யாதெனின், இறைவன் உயிர்கள் மீது கொண்ட கருணை தான். அருளை வழங்கி, தன்னை வெளிக்காட்டி, பேரின்பத்திற்குக் கொண்டு செல்ல உயிர்களை வழிபடுத்துகின்றான்.

No comments:

Post a Comment