Friday 19 September 2014

அருட்சிறப்பு

பந்தங்களில் பிணக்குற்று,
பிறவிப் பெருங்கடலில்
பிறந் திறந்து,
புண்பட்டு அல்லலுறும்
புல்லிய பல்லுயிர்கள்
பற்றியிருக்கும் ஆணவப்
பிசாசை அடியோடு,
பிடுங்கி ஒழித்து
பித்தன் பதமடைந்து
பேரின்பத் தெள்ளமுதம்
பருகிட உற்ற,
உறுபொருள் அருளே!

No comments:

Post a Comment