Sunday 14 September 2014

பஞ்சாட்சரம்



பஞ்சாட்சரம் என்றால் ஐந்தெழுத்து. அது என்ன உடலுக்குப் பயனாகும் பஞ்சாட்சரம் ? உயிருக்குப் பயனாகும் பஞ்சாட்சரம் ? இரண்டிற்கும் வேறுபாடு உண்டா என்றால் நிச்சயமாக உண்டு.

பஞ்சாட்சரம் வகைகள்:

  • தூல மந்திரம் - நவசிவாய (பருநிலை)
  • சூக்கும மந்திரம் - சிவாயநம (நுண்ணிலை )
  • அதிசூக்கும மந்திரம் - சிவாயசிவ (மிகு நுண்ணிலை)


சிவாயசிவ:

எப்படி சமய தீக்கைப் பெறாதோர் உடலில் பதினாறு இடங்களில் திருநீறு அணியக் கூடாதோ அதே போன்று சமய தீக்கைப் பெறாதோர் 'சிவாயசிவ' என்று கூறக் கூடாது.                              

"ஓசைதரும் ஐந்தெழுத்தை விதிப்படி உச்சரிக்க"

ஒரு சாதாரண மனிதன் எப்படி இறைவன் இருக்கும் கருவறைக்குள் நுழையக்கூடதோ, அதே போன்று தான் சில சிவாகம விதிகளும். உலகப் பற்றுகளை அறுத்து, இல்லறம் துறந்த சித்தர்கள், ஞானிகள் உச்சரிக்கக் கூடிய மந்திரம் தான் 'சிவாயசிவ'. எனவே நாமும் சைவநெறி நிற்றல் நலன் பயக்கும்.

நமசிவாய:

இம்மந்திரம் தான் உடலுக்குப் பயனாவது. நம் உலகியல் வாழ்விற்கு இன்பத்தை தரவல்லது. அனைவராலும் உச்சரிக்க ஏற்றது. ஒரு உயிரின் ஆசையை வளர்த்துக் கொண்டே இருக்கச் செய்கிறது. ஒரு உடலுக்கு உலக இன்பங்கள் எல்லாம் தரவல்லது 'நமசிவாய' என்னும் மந்திரம். எனவே ஓர் உயிர் நல்வினை, தீவினை என்ற இரண்டையும் செய்வதன் பயனாய் மீண்டும் மீண்டும் பிறக்க நேரிடுகிறது. எனவே, இந்நாமம் உயிருக்கு நன்மை பயப்பது அன்று.

சிவாயநம:


இந்நாமமே உயிருக்குப் பயனாவது. எப்படியெனில், பிறப்பற்ற நிலைக்கு ஒரு உயிரை கொண்டு சொல்லக் கூடியது 'சிவாயநம' என்னும் மந்திரம் ஆகும். ஒவ்வொரு சமயமும் இறைவனுடன் உயிர் கலந்து நிற்கும் பேரானந்த நிலையைத்தான் முத்தி என்று கூறுகின்றன. ஓர் உயிரின் பயணமும் பிறப்பற்ற நிலை நோக்கி செல்ல வேண்டுமானால் ' சிவாயநம' என்று ஓதுதல் வேண்டும்.

  • சி - சிவன்
  • வா - அருள்
  • - உயிர்
  • - மறைப்பாற்றல்
  • - ஆணவமலம்


ஓர் உயிர் தன்னை பின்னிறுத்திக் கொண்டு(), ஆணவத்தை புறந் தள்ளிவிட்டு(நம), இறையருள் துணையோடு (வா) சிவனை வழிபடுதலை (சி), 'சிவாயநம' என்னும் மந்திரம் உணர்த்துகிறது.

ஒவ்வொரு எழுத்திலும் ஒவ்வொரு பொருள் பதிந்துள்ளது. எனவே தான் 'நமசிவாய' என்னும் போது, ஆணவம் முந்திக் கொண்டு நிற்க (நம), அருளது துணையின்றி (வா) ஒரு உயிர் இறைவனை வழிபடும் நிலை உண்டாகிறது. தன்னை வணங்குபவருக்கு இன்பத்தைத் தரும். இறைவன் பிறப்பை வழங்கும் நிலை உண்டாகிறது.

போகின்ற பாதை சரியாக இருந்தால் தானே, நினைத்த இடத்திற்கு சென்றடைய முடியும். அது போலத் தான் இறை நாமங்களும்!

ஓம் - பிரணவத்துள் பஞ்சாட்சம்


+ + ம் = ஓம்

  • - சிவத்தையும் அருளையும் குறிக்கும் (சிவா)
  •   - உயிரைக் குறிக்கும் ()
  • ம் - ஆணவமலத்தையும் மறைப் பாற்றலையும் குறிக்கும் (நம)

ஆக, ஓம் என்னும் பிரணவப் பொருளிலும் 'சிவாய நம' என்னும் மந்திரப்பொருள் தான் உள்ளது.

எனவே ஓம் சேர்த்தும் சேர்க்காமலும் ஐந்தெழுத்தான 'சிவாயநம', 'நமசிவாய' என்னும் மந்திரங்களை ஓதலாம்.

ஓம் சிவாயநம - சிவாயநம சிவாயநம
ஓம் நமசிவாய- சிவாயநம நமசிவாய

என்று பொருளாகின்றது .

 சித்தர்கள் , ஞானிகள் போன்றோரும் 'சிவாய சிவ' என்று சொல்லவே கூடாது. ஏனெனில், மிக நுண்ணிய மந்திரமான 'சிவாய சிவ' என்பதுடன்  எம் மந்திரமும் சேர்த்தல் கூடாது.
  
ஐந்தெழுத்து ஐந்து தரும்

"சிவாய நம என்று சிந்தித்து ருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லை"

ஔவைப் பிராட்டியும், ' சிவாய நம என்று நாம் கூறும் போது எந்த துன்பங்களும் நமக்கு எந்நாளும், அதாவது இம்மை, றுமை என்ற இரண்டிலும் இல்லை என்கிறார்.

மேலும் இம்மந்திரம்,

1. நல்வாக்கு
2. இனிய பாற்சோறு
3. நல்லார் இணக்கம்
4. உயர்ந்த நற்குணம்
5. குறைவிலா செல்வம்

என்ற வாழ்வியல் பயன்களையும் அளவோடு தருகின்றது.

மந்திரவேந்து - சிவாயநம

'சிவாயநம' என்னும் நாமத்தை 'மந்திரவேந்து' என்பர். மந்திரம் என்றால் நினைப்பவனைக் காப்பது என்று பொருள். வேந்து என்றால் அரசன் என்று பொருள். எனவே மந்திரங்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது 'சிவாயநம' என்னும் மந்திரமே ஆகும்.

"சிவாயநம எனச்சித்தம் ஒடுக்கி
அவாயம்  அறவே அடிமையது ஆக்கிச்
சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே"

திருமூலரும், சிவாயநம என்னும் மந்திரம் தான் தலையாயது என்கிறார். இப்பிறவியில் ஆன்மாவை ஒழுங்குபடுத்தி, அதற்கு அடுத்தொரு பிறவி ஏற்படாதபடி காக்கும் வல்லமை இந்நாமத்திற்கு உண்டு.

ஆக, அளவோடு கூடிய உலக இன்பமும் முடிவில் இறை இன்பம் தரக் கூடியது 'சிவாயநம' என்பதே ஆகும்.
உயர்ந்தவன், ஏழை, கற்றவன், கல்லாதவன் என அனைத்து மக்களுமே தங்கள் வாழ்வில், என்றாவது ஒரு நிமிடம் பிறப்பின் இன்னல்களை நினைத்து வெறுக்காமல் இருந்திட முடியாது.


எனவே, சாதாரண மனிதர்களாகிய நாமும், வளமான வாழ்வும் அளவற்ற இறைப்பேரானந்தமும் அடைய ஆன்மாவை வளப்படுத்தும் வல்லமை உடைய 'சிவாய நம' என்னும் மந்திரத்தை உச்சரிப்போம். உயிரை மேன்மையுறச் செய்வோம்.

2 comments:

  1. சரிதான் .நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அருமையான பதிவு மிக்க நன்றி

    ReplyDelete