Friday, 19 September 2014

அருட்சிறப்பு

பந்தங்களில் பிணக்குற்று,
பிறவிப் பெருங்கடலில்
பிறந் திறந்து,
புண்பட்டு அல்லலுறும்
புல்லிய பல்லுயிர்கள்
பற்றியிருக்கும் ஆணவப்
பிசாசை அடியோடு,
பிடுங்கி ஒழித்து
பித்தன் பதமடைந்து
பேரின்பத் தெள்ளமுதம்
பருகிட உற்ற,
உறுபொருள் அருளே!

No comments:

Post a Comment