Friday 19 September 2014

அருளாளன்

ஆசு நீக்கும் ஆசானாய்,
சீலமிகு சிவஉருவாய்,
ஞாலமெங்கும் ஞான ஒளியாய்,
வியாபகமாய் விளங்கும்
அருளாளனின்,
அருட் சிறப்புரைக்க
அமுத மொழிகளை
அதரங்கள் அசைபோட,
அண்டகோடிகளி லெல்லாம்

அசைந்தாடுகிற தென்னகம்.

No comments:

Post a Comment