தாயின்
கருவறையை அடைவது முதலாய், பூமித்தாயின்
மடியில் முடிவது வரை போர்க்களம்
தான் ஒவ்வொருவருக்கும். அழுது புரண்டு போராடினால்
தான் பச்சிளம் பிள்ளைக்கு பால் புகட்ட ஓடி
வருவர். அப்பிள்ளை தவழ்ந்து, நடந்து, ஓடுவதற்கும், தவறி
விழும் ஒவ்வொரு தருணத்திலும் போராட
வேண்டும். போராட சோர்ந்தால் அடுத்தடுத்த
படிநிலைகள் இல்லை.
பேச, எழுத என வளரும்
ஒவ்வொரு நிலைகளில் போராட வேண்டும். அலுவல்
தேடி அலுவலங்களில் போராட வேண்டும். ஒருவேளை
அவனது ஆசைகள் தான் போராட்டத்திற்கு
காரணம் என்றால், முற்றும் துறந்த முனிவர், இறையை
அடைய போராடத்தான் செய்கிறார். ஒவ்வொரு மனிதனும் தனக்கான
எண்ணத்திற்காக போராடுதல் தவறு இல்லையே.
பாசம்,
ஆசை, இலட்சியம் என கருதுகோள்கள் பல,
கருவி ஒன்றே அது முடிவில்லாப்
போராட்டம். எப்போது அது முற்றுப்பெறும்?
மரணத்தின் போதும், மனிதன் அதனின்று
தப்பிக்க போராடுகின்றான். அவன் போராடாத தருணம்
என்று ஒன்று இல்லை. நான்
போராடியது இல்லை என்று சொல்பவன்
பொய்யன்.
போராடிப்
பிறந்தோம்
பார்போற்ற
வாழ்வோம்
பேராற்றல்
கொள்வோம் - அதைப்
போராடிப்
பெறுவோம்!