என் அடையாளம் அவன் .
கல்விக்
கரை சேர
கால்கள்
எனும் துடுப்பெய்தியவன்.
துடுப்பில்லா
படகு
தத்தளித்தல்லவா
போகும்?
என்னை
தளராது
தாங்கியவன்.
உ.வே.சா தாத்தாப்
போல்
ஓடி ஓடித் தேடினான்
உன்னத நூல்களை.
தொகுத்து
வைத்துள்ளேன்
நினைவுகளாய்
நூல்களையும், அவனையும்,
கை ஒடிந்து விட்டது . ஆமாம்!
தன்னம்பிக்கை
ஒடிந்துவிட்டது.
தகப்பன்
என்ற ஒருவன்
கோட்டை
போன்ற காப்பு.
தகர்ந்தது
நீ மட்டுமல்ல - என்
துணிவும்
தான் .
தாயைப்போல
அவனது அன்பும்
ஆழம் தான்.
மூடிய சிப்பிக்குள்
முத்துப்
போல.
நீ தந்த அறிவை
தொலைக்க
விரும்பவில்லை
தூசு தட்டுகிறேன்.
என் தகப்பனே - இல்லை
என் தைரியமே,
துணையாக
என்றும்
நீ இருப்பாய் என்று
திடமாக
நம்புகின்றேன்
துணிவே துணை.
No comments:
Post a Comment