Saturday 8 August 2015

தகப்பன்சாமி



என் அடையாளம் அவன் .
கல்விக் கரை சேர
கால்கள் எனும் துடுப்பெய்தியவன்.
துடுப்பில்லா படகு
தத்தளித்தல்லவா போகும்?
என்னை
தளராது தாங்கியவன்.

.வே.சா தாத்தாப் போல்
ஓடி ஓடித் தேடினான்
உன்னத நூல்களை.
தொகுத்து வைத்துள்ளேன்
நினைவுகளாய் நூல்களையும், அவனையும்,
கை ஒடிந்து விட்டதுஆமாம்!

தன்னம்பிக்கை ஒடிந்துவிட்டது.
தகப்பன் என்ற ஒருவன்
கோட்டை போன்ற காப்பு.
தகர்ந்தது நீ மட்டுமல்ல - என்
துணிவும் தான் .
தாயைப்போல
அவனது அன்பும்
ஆழம் தான்.

மூடிய சிப்பிக்குள்
முத்துப் போல.
நீ தந்த அறிவை
தொலைக்க விரும்பவில்லை
தூசு தட்டுகிறேன்.
என் தகப்பனே - இல்லை
என் தைரியமே,
துணையாக என்றும்
நீ இருப்பாய் என்று
திடமாக நம்புகின்றேன்

 துணிவே துணை.

No comments:

Post a Comment