Saturday 22 August 2015

எள்ளல்



கொக்கரித்த சிரிப்பால்
காப்பியங்கள் பிறந்துள்ளன
எத்தனைக் காலங்கள் உருண்டாலும்,
எள்ளி நகையாடிய தருணங்கள்
எள்ளளவும் மனதினின்று நகராது.

அவையடக்கத்துள் நகைச்சுவைக்கும்
அகராதிகள் உண்டு.
அளவு மீறுகின்ற போது
அணை உடைவது போல,
அலட்சியச் சிரிப்பால்
அவலட்சணமாகிப் போகும்
அகங்கள் பல உண்டு.

எல்லை தாண்டா எள்ளல்

எண்சுவைகளில் அழகே!

No comments:

Post a Comment