Tuesday 18 August 2015

அத்தை மடி



அதிமதுரப் பூவழகே - நீ
அழுததாலே மேற்கே
அந்தவானமும் அழுகுதே,
அந்திச்சூரியனும் மயங்குதே,
அம்மலையரசி தாங்காமல் - கண்
அருவி நீர் சொரியுதே,
அரும்பு மலரே
அழுதது போதுமடி,
அத்தைமடி வந்திடடி - உன்னை
அரவணைத்துத் தாலாட்ட

ஆயிரம் பிறப்புப் போதாதடி.

No comments:

Post a Comment