Saturday 1 August 2015

ஆலயமும் உடலும்



          உடலானது ஆன்மாவின் இருப்பிடமாக இருப்பதுடன், ஆன்மா இறைவனை அடைவதற்கும் துணைபுரிகிறது. அதே போல் உடலின் அமைப்பும் இறை சம்பந்தத்துடன் உள்ளது.

           நம்முடைய உடலில் 72000 நாடிகள் உள்ளன. இதனுள் நடுவாக உள்ள நாடியே மூலநாடியாகும். இதனை 'சுழுமுனை' என்பர். இங்கு தான் இறைவன் உறைகின்றான் என்பது சித்தர்கள் கருத்து. மேலும், உடல் அமைப்பு ஆலய அமைப்பினையும் ஒத்து உள்ளது.
    • மண்டை ஓடு - சிவலிங்கம் 
    • வயிற்றின் மேற்பகுதி - நந்தி 
    • தொப்புள் - பலிபிடம் 
    • பாதவிரல்கள் - கலசங்கள் 

ஆக, இறைவனின் ஆணைப்படி, உயிரானது உடலுடன் இணைகிறது. அவ்வுடம்பின் துணையுடன் உயிரானது, தனது ஆணவம், கன்மம், மாயை, என்ற மும்மலங்களை முழுதாய் நீக்கி, மேன்மை நிலை எனும் முத்தி நிலை அடைய உடலின் துணை அவசியமானதாகிறது.

No comments:

Post a Comment