Saturday 8 August 2015

மழைமகள்



மின்னல் தீப ஒளியில்,
இடி மிருதங்க ஓசையில்,
காற்றின் கீதத்தில்,
மழை மகளே,
வான் மேடை மீது நீ
நர்த்தனம் புரிவதால்
நாங்கள் உயிர் வாழ்கிறோம் மகளே!
நாங்கள்
கட்டியுள்ள கட்டிடங்கள்
நனைந்து சிலிர்கின்றன மகளே,
விழும் பணக்காய்களை
விழுங்கி உயிர்வாழ்வோம் மகளே,
வேர்பாய்ந்திடாத
மண் வளம் மிக்க
செங்கல் பூமியாய்,
சீக்கிரம் மாற்றிடுவோம் மகளே
இப்போதும்
அப்போதும்
எப்போதும் நீ வா மகளே,

வருக! வருக! வருக!

No comments:

Post a Comment