உதிரம்
பிரித்து
உயிர்ப்பால்
கொடுத்து,
ஒரு கணம் பிரியாது
உடற்சூட்டோடு
அணைத்து
வாஞ்சையாய்
வளர்த்த பிள்ளை,
வாலிபம்
தொட்ட பின் - அமில
வார்த்தைகள்
கொட்டினாலும்,
வெறுத்து
ஒதுக்கினாலும்,
கடிந்து
பேசிடாத - அவள்
கருணைக்கு
ஈடு உண்டா?
கடைமணித்துளியிலும்
அவள்
கண்கள்
நம்மைத் தேடும்.
காலம் சென்ற பின்னும்
காக்கும்
குலதெய்வம் அவள்.
No comments:
Post a Comment