Saturday 8 August 2015

தாய்மை


உதிரம் பிரித்து
உயிர்ப்பால் கொடுத்து,
ஒரு கணம் பிரியாது
உடற்சூட்டோடு அணைத்து
வாஞ்சையாய் வளர்த்த பிள்ளை,
வாலிபம் தொட்ட பின் - அமில
வார்த்தைகள் கொட்டினாலும்,
வெறுத்து ஒதுக்கினாலும்,
கடிந்து பேசிடாத - அவள்
கருணைக்கு ஈடு உண்டா?

கடைமணித்துளியிலும் அவள்
கண்கள் நம்மைத் தேடும்.
காலம் சென்ற பின்னும்

காக்கும் குலதெய்வம் அவள்.

No comments:

Post a Comment