Saturday 22 August 2015

பூமாலை


மலையத்தேவன் மகளே,
மதுரைநகர் அரசியே,
மாடவீதிகளில் உலாவரும்
மலை மகளே!

நான் தொடுக்கும்,
ஆயிரம் ஆயிரம்
ஆரங்களால் உன்னை
அலங்காரம் செய்கின்றனரே,

உனது அடியிலே
வளர்ந்து நிற்கும்
வனிதை என்
வீதி நீ அறிவாயோ?

வேண்டும் வரம் தருபவளே,
ஒரு பூமாலை தந்திடம்மா - என்
உள்ளங்கவர் மணாளன் கைகளால்

எனக்கு ஒரு பூமாலை தந்திடம்மா!

No comments:

Post a Comment