Saturday 22 August 2015

உழவன்



உழுது உழுது
வளைந்த முதுகு,
வெய்யிலைக் கண்டு
வாடி வியர்த்தாலும்
ஒய்வு தேடாது
உழைக்கும் கைகள்,
கல், மண், முள் என எதைக்
கண்டும் பணியாத பாதங்கள்,
வானம்பார்த்த பூமியில்
வியர்வை பாய்ச்சி,
வாழ்நாள் முழுதும்
வயல்வெளியில் வாசம் செய்து,
நெல்மணிப் பார்க்கையில்
நெஞ்சில் நிம்மதிப் பெருமூச்சு
அறுவடைப் பார்த்தாச்சு.
ஆனாலும் உழவன் வீட்டு
அடுக்களையில்
அரிசிப் பானையில்,
பஞ்சம் தீரலையே

பிள்ளைகள் பசியாரலையே!

No comments:

Post a Comment